Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் ஆதாயத்திற்காக பாஜக கபட நாடகம் - மாயாவதி குற்றச்சாற்று

Webdunia
வியாழன், 8 மே 2014 (19:25 IST)
வாரணாசியில் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பாஜக நடத்திய போராட்டம் தேர்தல் ஆதாயத்திற்காக நடத்தப்படும் கபட நாடகம் என மாயாவதி குற்றம்சாற்றியுள்ளார்.
 
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, "உத்தர பிரதேசத்தில் இன்னும் 18 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, சமாஜ்வாடியின் முலாயம் சிங் யாதவ் ஆகிய பெரிய தலைகள் இத்தேர்தலில் களம் காண்கின்றனர். மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் வாக்காளர்களை கவரும் முயற்சி பலன் அளிக்காததால் இது போன்ற தேர்தல் ஆதாய நாடகங்களை பாஜக நடத்திவருகிறது" என்று கருத்து தெரிவித்தார்.
 
மேலும், கங்கையில் நரேந்திர மோடியின் சிறப்பு பூஜைக்கான ஏற்பாடும் தேர்தல் ஆதாய நாடகமே என அவர் கூறினார். கிழக்கு உத்தர பிரதேசத்தில் பாஜகவிடம் இருந்து முஸ்லீம்களை பாதுகாக்க சமாஜ்வாடியால் மட்டுமே முடியும் என்ற ஒரு தோற்றத்தை சமாஜ்வாடி உருவாக்கி வருவதாகவும் ஆனால் அது உண்மை நிலை அல்ல என்றும் மாயாவதி குற்றம்சாற்றியுள்ளார்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments