Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது: பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா

Webdunia
ஞாயிறு, 31 ஜூலை 2022 (14:07 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திறமையான ஆட்சியை பிரதமர் மோடி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பாராட்டிவிட்டு சென்ற நிலையில் தமிழகத்தில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது என பாஜக தேசிய தலைவர் நட்டா தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
 பீகார் தலைநகர் பாட்னாவில் பாஜகவின் புதிய அலுவலகத்தை திறந்து வைத்து தேசிய தலைவர் நட்டா பேசினார் அப்போது.  இதை நாம் ஒருபோதும் பாஜக அலுவலகம் என்று எண்ணக் கூடாது என்றும் அலுவலகம் என்றால் காலை 10 மணிக்கு திறந்து மாலை 6 மணிக்கு மூடப்படும் என்றும் ஆனால் இருபத்தி நான்கு மணி நேரமும் நமது சித்தாந்தத்தை உடன் வாழும் ஒரு இடமாக இந்த பாஜக அலுவலகம் இருக்க வேண்டும் என்றும் பேசினார் 
 
மேலும் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்களில் குடும்ப அரசியல் தலைவிரித்தாடுகிறது என்றும் குடும்ப அரசியலுக்கு எதிராக போராடுவதே நமக்கு மிகப்பெரிய சவால் என்றும் அவர் கூறினார் அவரது இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments