நாடாளுமன்றத்தில் அத்துமீறிய விவகாரம்: பரிந்துரை செய்த பாஜக எம்பி விளக்கம்..!

Webdunia
வியாழன், 14 டிசம்பர் 2023 (08:27 IST)
நேற்று நாடாளுமன்றம் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர் பகுதியில் இருந்த இரண்டு பேர் திடீரென எம்பிக்கள் இருக்கும் பகுதிக்கு சென்று கலர் புகை குப்பிகளை வீசிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 
நாடு முழுவதிலும் இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சி எம்பிகள் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு?யாகி உள்ளதாக அவர்கள் கூறினர். 
 
அதுமட்டுமின்றி சம்பந்தப்பட்ட இரண்டு நபர்களுக்கு பரிந்துரை செய்தது பாஜக எம் பி பிரதாப் சின்ஹா என்று கூறப்பட்ட நிலையில் அவர் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான சாகர் சர்மா என்பவரின் தந்தை தான் தேர்வு செய்யப்பட்ட மைசூர் தொகுதியில் வசிப்பவர் என்றும் தனது மகனுக்கு நாடாளுமன்ற நிகழ்ச்சிகளை காண அனுமதி கூறியதால் அவர்களுக்கு பரிந்துரை பரிந்துரை கடிதம் அளித்ததாகவும் பாஜக எம் பி பிரதாப் சிம்ஹா சபாநாயகர் ஓம் பிரகாஷ் அவர்களிடம் விளக்கம் அளித்துள்ளார். 
 
இது தவிர அந்த நபர்களின் செயலுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வேண்டும். தவறினால் கடும் நடவடிக்கை!.. நீதிபதி சுவாமிநாதன் உத்தரவு!..

கல்லூரி சீனியர் போல் நடித்த மோசடி செய்ய முயற்சி.. ChatGPT மூலம் கண்டுபிடித்த இளைஞர்..!

4 ஆண்டுகளில் 4 குழந்தைகளை கொன்ற இளம்பெண்.. மரண தண்டனை விதிக்க கோரிக்கை..!

தமிழக அரசு ஏதோ நோக்கத்துடன் வழக்கு தொடர்ந்துள்ளது: மதுரை உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள்..!

திருப்பரங்குன்றம் விவகாரம்!.. தமிழக அரசு மேல்முறையீட்டு மனு நிராகரிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments