Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமரிந்தர் சிங்கின் கட்சியுடன் பாஜக கூட்டணி!!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:25 IST)
பாரதிய ஜனதா கட்சி, முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அறிவிப்பு. 

 
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங்குடன் சித்துவுக்கு வெளிப்படையான மோதல் போக்கு இருந்து வந்தது. இதனிடையே அமரீந்தர் சிங் முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதன் பின்னர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கினார். ஆம், பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற கட்சியை அவர் தொடங்கினார். 
 
இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியுடன் அமரிந்தர் சிங்கின் கட்சி கூட்டணி அமைத்துள்ளது. விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் பட்சத்தில், அடுத்தாண்டு நடைபெறும் பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாம் என முன்னர் தெரிவித்தார். 
 
அந்த வகையில் பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, முன்னாள் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கின் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாரதிய ஜனதா என 3 அணிகள் மோதும் மும்முனை போட்டியாக பஞ்சாப் சட்டப்பேரவை தேர்தல் அமைய உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்
Show comments