Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தலுக்காக பாஜக - காங்கிரஸ் கூட்டணி: தேசிய அரசியலில் அதிர்வலை...

Webdunia
வெள்ளி, 19 ஜனவரி 2018 (16:15 IST)
மகராஷ்டிரா ஊராட்சி தலைவர் தேர்தலுக்காக காங்கிரஸ் பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் அதிருப்தியில் உள்ளார். 

மகராஷ்டிரா கோண்டியா மாவட்டத்தில் அண்மயைில் நடைபெற்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் 20 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அடுத்தபடியாக, காங்கிரஸ் 17 இடங்களிலும், பாஜக 16 இடங்களிலும் வெற்றி பெற்றன. 
 
ஊராட்சித் தலைவர் மற்றும் துணை தலைவர் பதவிகளுக்காக தேசியவாத காங்கிரஸுடன் காங்கிரஸ் கட்சி தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், இதற்கு ஒரு முடிவு வராமல் இழுபறி நீடித்து வந்தது. 
 
இதனால், யாரும் எதிர்பாராத வகையில் பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது. கோண்டியா மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்டிருந்த வேட்பாளருக்கு பாஜக ஆதரவளித்தது. 
 
அதேபோல், துணை தலைவர் பதவிக்கு நிறுத்தப்பட்டிருந்த பாஜக வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவளித்தது. இந்த நிகழ்வு காங்கிரஸ் தலைமையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனவே, இது குறித்து விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மகாராஷ்டிரா காங்கிரஸ் கமிட்டிக்கு கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments