Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிமாச்சலப்பிரதேச மக்களைப் பிரிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது: வீபத்ரசிங் குற்றச்சாட்டு

Webdunia
ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (10:18 IST)
ஹிமாச்சலப்பிரதேச மக்களை பிரிக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக அம்மாநில முதல் அமைச்சர் வீரபத்ர சிங் குற்றஞ்சாட்டி உள்ளார்.


 
 
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக கூறி முதல் அமைச்சர் வீரபத்ர சிங்குக்கு சொந்தமான வீடுகளில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது. மேலும் அவர் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
 
மின் நிறுவனம் ஒன்றின் உரிமத்தை பத்துமாதங்கள் நீட்டித்ததற்கு வீரபத்ரசிங்குக்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக பா.ஜ.க குற்றஞ்சாட்டியதை அடுத்து இந்த அதிரடி சோதனையில் சி.பி.ஐ. ஈடுபட்டிருந்தது.
 
இந்நிலையில்  சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் பிரிவினைவாத அரசியலில் பா.ஜ.க. ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
 
இது குறித்து அவர் கூறுகையில், "பா.ஜ.க. ஒவ்வொரு முறை ஆட்சிக்கு வரும் போது என் மீது பொய்யான வழக்குகளை பதிவு செய்ய முயற்சிக்கிறது. ஆனால் அந்த வழக்கில் இருந்து நான் வெளியேறுகிறேன்". "ஹிமாச்சலப்பிரதேச மக்களை பிரித்து அதன் மூலம் என் அரசியல் வாழ்க்கையை அஸ்தமனமாக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது". இவ்வாறு அவர் தெரிவித்தார்.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments