Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாலியை அடகு வைத்து கழிவறை கட்டிய பெண் : பீகாரில் ஆச்சர்யம்

Webdunia
செவ்வாய், 19 ஜூலை 2016 (16:46 IST)
கணவன் கட்டிய தாலியை அடகு வைத்து, வீட்டில் கழிவறை கட்டிய ஒரு பெண்ணைப் பற்றி செய்தி வெளியாகியிருக்கிறது. 


 

 
பீகாரில் உள்ள ரோகத் மாவட்டத்தில் பாராக்கானா என்ற ஒரு கிராமம் உள்ளது. அங்கு பெரும்பாலான வீடுகளில் கழிவறை கிடையாது. அங்கு வசித்து வருபவர் போல்குமாரி. இவர் அங்குள்ள பள்ளி ஒன்றில் சமையல் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். 
 
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி அறிவித்து தூய்மை இந்தியா திட்டத்தில் பெரிதும் ஈர்க்கப்பட்ட போல்குமாரி, தனது வீட்டிலும் கழிப்பறை ஒன்றை கட்ட வேண்டும் என்று விரும்பினார். அவரதும் கணவரும் ஒரு கூலித் தொழிலாளி என்பதால், வேறு வழியில்லாமல், தன்னுடைய தாலியை அடமானம் வைத்து, தான் வசிக்கும் வீட்டில் கழிவறை கட்ட தொடங்கினார். குடும்பத்தினரின் எதிர்ப்பையும் மீறி, அவர் கழிப்பறையை கட்டி முடித்தார்.
 
இதைக் கேள்விபட்ட அதிகாரிகள், அவரை கழிவறை திட்ட பணிகளுக்கு தூதராக நியமித்து உள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலுணர்வை தூண்டும் பூஞ்சை காளான். ரூ. 1 கோடி விலை.. வாங்குவதற்கு ஆர்வம் காட்டும் இளைஞர்கள்..!

தவெக முதல் ஆண்டு விழாவில் 2000 பேருக்கு மட்டுமே அனுமதியா? பாஸ் வழங்கும் பணி தொடக்கம்..!

10 ஆயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் தேசிய கல்வி கொள்கையில் கையெழுத்திட மாட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு சிக்கல்.. உடனே என்ன செய்ய வேண்டும்?

நாகை - இலங்கை கப்பல்.. பயணிகளை ஈர்க்க இலவச உணவுகள் என அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments