Webdunia - Bharat's app for daily news and videos

Install App

30 வருடங்களாக அரசாங்கத்துக்கு ”அல்வா” கொடுத்த நபர்: யார் அந்த ஆசாமி??

Webdunia
திங்கள், 26 ஆகஸ்ட் 2019 (12:10 IST)
பீகாரைச் சேர்ந்த ஒரு நபர் 30 வருடங்களாக ஒரே நேரத்தில் மூன்று அரசு பணிகளில் பணியாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியில் சுரேஷ் ராம் என்பவர் வசித்து வசித்து வருகிறார். இவர் ஒரே நேரத்தில் மூன்று அரசாங்க பணிகளில் பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்நிலையில் மூன்று அரசு பணியிலும் ஒரே பெயர், ஒரே விலாசத்தைச் சேர்ந்த நபர் பணிபுரிவதை சந்தேகித்த அதிகாரிகள், சுரேஷ் ராமை விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் சுரேஷ் ராம் விசாரணைக்கு வராமல் தலைமறைவானார். அவரை தேடி பிடித்து கைது செய்து போலீஸார் விசாரித்தபோது தான், 30 வருடங்களாக இவ்வாறு மூன்று அரசு பணிகளில் பணியாற்றி சம்பளம் வாங்கிவந்தது தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் அப்பகுதியில் வேடிக்கையான ஒன்றாகவும், அதிர்ச்சியான ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது. இது குறித்து அரசாங்க அதிகாரிகள் சுரேஷ் ராமை விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

அடுத்த கட்டுரையில்
Show comments