பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதிர் குமார் போரிகா இது குறித்து தெரிவித்துள்ளதாவது:-
"பிஜேந்திர பிரசாத் யாதவின் பேரன் மணீஷ், வயது 11 சுபால் மாவட்டம் பார்சா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
அவர் கோடை விடுமுறை முடிந்து வீட்டில் இருந்து பள்ளி விடுதிக்கு கடந்த 1 ஆம் தேதி திரும்பியுள்ளார். அப்போது மர்ம நபர்கள் யோரோ மணீஷை கடத்திச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மணீஷை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.