Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பீகார் வேளாண்மை கல்லூரிக்கு அப்துல் கலாம் பெயர்: நிதிஷ் குமார் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 28 ஜூலை 2015 (20:07 IST)
மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் புகழுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பீகாரில் உள்ள வேளாண்மை கல்லூரிக்கு அவரது பெயர் சூட்டப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் இன்று அறிவித்துள்ளார்.
 

 
அப்துல் கலாமின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பாட்னாவில் இருந்து இன்று டெல்லி புறப்பட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், பீகாரின் வளர்ச்சி பற்றி, குறிப்பாக கிராமப்புற வளர்ச்சி பற்றி அப்துல் கலாம் எப்போதுமே நினைத்து வந்தார். பீகார் எப்போதுமே அவரது இதயத்துக்கு மிக நெருக்கமாக இருந்துள்ளது.
 
அவரது நினைவாக இங்குள்ள கிஷன்கஞ்ச் வேளாண்மை கல்லூரியின் பெயரை ஏபிஜே அப்துல் கலாம் வேளாண்மை கல்லூரி என்று மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
 
அப்துல் கலாமின் மறைவையொட்டி பீகார் மாநில அரசுக்கு சொந்தமான பள்ளிக்கூடங்க்ளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments