Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் பதவியேற்றார்!

Webdunia
திங்கள், 12 டிசம்பர் 2022 (14:42 IST)
குஜராத் மாநிலத்தின் முதல்வராக 2 வது முறையாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றார்.

குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் நடந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை முடிவில் குஜராத்தில் பாஜகவும், இமாசல பிரதேசத்தில் காங்கிரஸும் ஆட்சி அமைக்க உள்ளது.

குஜராத்தில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்று ஆட்சி அமைக்கிறது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் 156 தொகுதிகளில் பாஜக வென்றது.( ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றது).

குஜராத் மாநிலத்தில் 7 வது முறையாக  பாஜக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில்,குஜராத் மாநில முதல்வராக பூபேந்திர படேல் டிசம்பர் 12 ஆம் தேதி பதவியேற்கிறார் என குஜராத் பாஜக மாநில தலைவர் சி.ஆர்.பட்டீல் அறிவித்திருந்தார்.

 ALSO READ: குஜராத் தேர்தல்: ஜடேஜா மனைவி ரிவாபா வெற்றி!

இந்த நிலையில், குஜராத் மாநில முதல்வராக 2 வது முறையாக பூபேந்திர படேல் இன்று பதவியேற்றுள்ளார். இவருக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

காந்தி நகரில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர்  பங்கேற்றனர்.  

Edited By Sinoj

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments