Webdunia - Bharat's app for daily news and videos

Install App

60 மணி நேரம் நடந்த சோதனை நிறைவு.. பிபிசி அலுவலகத்தில் ஆவணங்கள் சிக்கியதா?

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2023 (07:55 IST)
பிபிசி அலுவலகத்தில் கடந்த 60 மணி நேரமாக நடந்த வருமானவரித்துறை சோதனை முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது குறித்து பிபிசி அலுவலகம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வருமானவரித்துறையினர் எங்கள் மும்பை மற்றும் டெல்லி அலுவலகங்களில் நடத்திய சோதனை முடிவுக்கு வந்துள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு எங்கள் அலுவலக அதிகாரிகள் முழு அளவில் ஒத்துழைப்பு அளித்துள்ளோம்.
 
மேலும் எங்கள் ஊழியர்களின் நலன் மிகவும் முக்கியம். ஒரே இடத்தில் மூன்று நாட்களாக அவர்கள் இருந்துள்ளார்கள். இருப்பினும் தொடர்ந்து நாங்கள் மக்களுக்கு சேவை செய்வோம். தொடர்ந்து வருமானவரித்துறை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம்’ என தெரிவித்துள்ளது.
 
 இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக நடந்த சோதனையில் சிக்கிய ஆவணங்கள் என்னென்ன என்பதை குறித்து அறிவிப்பை இன்று வருமானவரித்துறை அலுவலகம் வெளியிடும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் அதிர்ச்சி முடிவுகள் - குழப்பமான சூழலால் பல இடங்களில் வன்முறை

மாஞ்சோலை தோட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும்..! அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவு..!!

வேங்கை வயல் சம்பவத்தில் ஒருவர் கூட கைது செய்ய முடியாதது ஏன்? சென்னை உயர்நீதிமன்றம்

மணிப்பூரில் ராகுல் காந்தி வருவதற்கு சில மணி நேரத்திற்கு முன் துப்பாக்கி சூடு.. பெரும் பரபரப்பு..!

தமிழகத்தில் ரவுடிகள் ராஜ்ஜியம்..! கொலை நடக்காத நாளே இல்லை.! இபிஎஸ் காட்டம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments