Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மார்ச்.31 வரை வங்கிகள் இயங்கும் நேரம் மாற்றம்: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

Webdunia
திங்கள், 23 மார்ச் 2020 (12:06 IST)
கொரோனா வைரஸுக்கு எதிராக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மார்ச் 31 வரை பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்லூரிகள் திரையரங்குகள் மால்கள் உள்பட பல முக்கியமானவை அடைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த அதிரடியாக மார்ச் 31 வரை தினமும் 4 மணி நேரத்துக்கு மட்டுமே வங்கிகள் இயங்கும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று முதல் மார்ச் 31 வரை இந்தியா முழுவதும் வங்கிகள் அனைத்துமே 4 மணி நேரத்தில் மட்டுமே செயல்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்திய வங்கிகள் சங்கம் உறுதி செய்துள்ளது,
 
இதன்படி காலை 10 மணி முதல் 2 மணி வரை மட்டுமே வங்கிகள் செயல்படும் என்றும் சில வங்கி வாடிக்கையாளர்களின் வசதிக்கேற்ப காலை 11 மணி முதல் 3 மணி வரை செயல்படலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
 
மேலும் வங்கியில் இருந்து பணம் எடுத்தல், பணம் கட்டுதல், காசோலை பரிமாற்றம், அரசு தொடர்பான பணிகள், மற்ற வங்கிகளுக்கு பணம் கொடுத்தல் ஆகிய பணிகள் மட்டுமே நடக்கும் என்றும் நகைக்கடைகள், வீட்டு கடன் ஆகியவை எந்த பணிகளும் வரும் மார்ச் 31ம் தேதி வரை இல்லை என்றும் வங்கிகள் அறிவித்துள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

அடுத்த கட்டுரையில்
Show comments