Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கிகளுக்கு தொடர் விடுமுறை: ஏடிஎம்-இல் பணம் எடுப்பவர்கள் கவனத்திற்கு

Webdunia
திங்கள், 26 மார்ச் 2018 (11:24 IST)
அனைத்து வங்கிகளுக்கும் தொடர் விடுமுறை வருவதால் ஏடிஎம்-இல் பணம் எடுப்பவர்கள் மற்றும் வங்கியில் பணபரிவர்த்தனை செய்பவர்கள் முன்கூட்டியே செய்து கொள்ளும்படி கேட்டு கொள்ளப்படுகின்றனர்.

மார்ச் 29 மஹாவீர் ஜெயந்தி மற்றும் மார்ச் 30-ம் தேதி புனித வௌ்ளி ஆகியவைகளை முன்னிட்டு வங்கிகளுக்கு விடுமுறை. ஏப்.1-ம் தேதி ஞாயிறு என்பதால் விடுமுறை.  ஏப்ரல் 2ஆம்தேதி வங்கிகளின் ஆண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால் வங்கிகள் செயல்பட்டாலும் அன்றைய தினம் வாடிக்கையாளர்கள் பணப்பரிவர்த்தனை செய்ய முடியாது.


 
எனவே இடையில் மார்ச் 31ஆம் தேதி சனிக்கிழமை மட்டுமே வங்கிகள் இயங்கும் நாள். ஆனாலும் அன்றைய தினம் கூட்டம் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. எனவே வங்கி வாடிக்கையாளர்க்ள் இந்த வாரம் வியாழக்கிழமையும் அதற்கு முன்னரும் தேவையான பணப்பரிவர்த்தனைகளையும், ஏடிஎம்-இல் இருந்து தேவையான பணத்தை எடுத்து வைத்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments