Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஆண்டில் 71 ஆயிரம் கோடி மோசடி : ரிசர்வ் வங்கியின் அதிர்ச்சி அறிக்கை!

Webdunia
வியாழன், 26 டிசம்பர் 2019 (14:05 IST)
கடந்த நிதியாண்டில் மட்டும் வங்கிகளில் 71 ஆயிரம் கோடி ரூபாய் பண மோசடி நடந்திருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

2017-18 நிதியாண்டில் நடைபெற்ற மோசடிகளோடு ஒப்படுகையில் 2018-19 நிதியாண்டில் 74 சதவீதம் மோசடிகள் அதிகரித்திருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மோசடி சம்பவங்களும் 15 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2017-18ம் நிதியாண்டில் 5 ஆயிரத்து 916 வங்கி மோசடி சம்பவங்களும், 41 ஆயிரத்து 167 கோடி பண மோசடியும் நடந்துள்ளது.

2018-19 நிதியாண்டில் 6 ஆயிரத்து 801 வங்கி மோசடி சம்பவங்களும், 71 ஆயிரத்து 543 கோடி பண மோசடியும் நடந்துள்ளது.

இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள ரிசர்வ் வங்கி மோசடிகள் நடைபெற காரணம் வங்கிகளின் நிர்வாகம் மற்றும் தீவிர கண்காணிப்பில் உள்ள குறைகள் மற்றும் கடன் வழங்குவது, பெறுவதில் உள்ள அலட்சியத்தால்தான் என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வயது பிளஸ் 2 மாணவியை கர்ப்பமாக்கிய 60 வயது முதியவர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

அண்ணாமலை திறமையை தேசிய அளவில் பயன்படுத்துவோம்: அமித்ஷாவின் ட்வீட்..!

ஈபிஎஸ் தலைமையில் கூட்டணி.. அதிகாரபூர்வமாக அறிவித்த அமித்ஷா..!

பணத்தை நான் தான் திருடினேன்.. 6 மாதத்தில் திருப்பி கொடுத்துவிடுவேன்: திருடன் எழுதிய கடிதம்..!

அமித்ஷாவை சந்தித்தே ஆக வேண்டும்: ஆட்டோவில் வந்த அகோரியால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments