Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மரத்தில் தூக்கிலிடப்பட்ட சிறுமிகளின் ஆடைகளில் குற்றவாளிகளின் டிஎன்ஏ இல்லை

Webdunia
செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (16:09 IST)
உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு மரத்தில் சடலமாக தொங்கவிடப்பட்ட சிறுமிகளின் ஆடைகளில் குற்றம் சாற்றப்பட்டவர்களின் டிஎன்ஏ இல்லையென தகவல்கள் வெளியாகியுள்ளது.  
உத்தர பிரதேச மாநிலம் படானில் உறவுக்கார சிறுமிகள் இருவர் மரத்தில் தூக்கிலிடப்பட்டு சடலமாக மீட்கப்பட்டசம்பவத்தில், அவர்கள் இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு  கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
 
இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆடைகளில் குற்றம் சாற்றப்பட்டவர்களின் டிஎன்ஏ இல்லை என தடயவியல் ஆய்வுத் துறை சி.பி.ஐ.யிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
 
சம்பவம் நடந்தவுடனே அந்த இடத்தில் இருந்து நிறைய ஆதாரங்களை எடுத்திருக்க முடியுமெனவும், காவல் துறையினர் அதனை செய்ய தவறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்நிலையில், ஐதராபாத் தடயவியல் ஆய்வு மையம் அளித்துள்ள அறிக்கையில், கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் ஆடைகளில் குற்றம் சாற்றப்பட்டவர்களின் டிஎன்ஏ இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!