Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

Senthil Velan
சனி, 21 செப்டம்பர் 2024 (17:17 IST)
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி இன்று பதவி ஏற்று கொண்டார். அவருடன் 5-பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர்.
 
மதுபான கொள்கை வழக்கில், டெல்லி முதலமைச்சராக இருந்த அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. முதலமைச்சர் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது, துணை நிலை ஆளுநர் ஒப்புதல் இன்றி கோப்புகளில் கையெழுத்திடக்கூடாது என்பது உள்ளிட்ட உச்சநீதிமன்றத்தின் நிபந்தனைகளால் அர்விந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
டெல்லியின் புதிய முதலமைச்சராக அதிஷி பதவியேற்பார் என ஆம் ஆத்மி அறிவித்தது.  இதையடுத்து டெல்லி துணைநிலை ஆளுநரிடம் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கிய அதே நாளில் அதிஷி ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார்.
 
இந்த நிலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இன்று மாலை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி பதவியேற்று கொண்டார். அவருக்கு துணை நிலை ஆளுநர் சக்சேனா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


ALSO READ: இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!


அவருடன் கோபால் ராய், சவுரப் பரத்வாஜ் உள்ளிட்ட 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். டெல்லியின் மிக இளம் வயது முதலமைச்சர் என்ற பெருமையை 43 வயதாகும் அதிஷி பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அயோத்தி கோயில் கும்பாபிஷேகத்திலும் திருப்பதி லட்டு விநியோகம்..! விசாரணை நடத்த வேண்டும் - தலைமை அர்ச்சகர்.!!

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமரியாதை - இதுவா திராவிட மாடல் சமூக நீதி.? ராமதாஸ் கண்டனம்..!

மக்களை திசை திருப்புவதற்காக தமிழகத்திற்கு லட்டு பிரச்சனை- சீமான் பேச்சு!

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments