Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கே என்ன செய்றீங்க? டெல்லிக்கு போங்க! – அமைச்சருக்கு ஓவைசி அறிவுரை

Webdunia
புதன், 26 பிப்ரவரி 2020 (10:37 IST)
டெல்லி வன்முறையை கட்டுப்படுத்துவதில் பாஜக அரசு தோல்வியடைந்துள்ளதாக அசாசுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே நடந்த வன்முறையில் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டின் தலைநகரில் ஏற்பட்டுள்ள இந்த கலவரத்தால் நாடு முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெல்லி கலவரம் குறித்து பேசியுள்ள அசாசுதீன் ஓவைசி ”டெல்லி கலவரத்தை கட்டுப்படுத்துவதில் பாஜக தோல்வியடைந்துவிட்டது” என்று கூறியுள்ளார். மேலும் பாதுகாப்பு இணை அமைச்சர் கிஷன் ரெட்டியை குறிப்பிட்டு பேசிய அவர் ”உங்கள் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதியில் வன்முறை நிகழ்கிறது. ஹைதராபாத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? உடனே டெல்லிக்கு சென்று வன்முறையை கட்டுப்படுத்துங்கள்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

அடுத்த கட்டுரையில்
Show comments