Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மீண்டும் சம்மன்! 4-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை..!!

Senthil Velan
சனி, 13 ஜனவரி 2024 (12:30 IST)
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.
 
டில்லியில் 2021-2022ஆம் நிதியாண்டின் புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது. மதுபான கொள்கை மூலம் கோடி கணக்கில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக அமலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, அமைச்சர் சத்யேந்திர ஜெயின், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
 
மேலும் இந்த வழக்கில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவாலை விசாரணைக்கு ஆஜராகமாறு அமலாக்கத்துறையினர் மூன்று முறை சம்மன் அனுப்பி உள்ளனர். ஆனால் விசாரணை என்று அழைத்து கைது செய்வதே அவர்களின் நோக்கம் என கூறி  அமலாக்கத்துறையினரிடம் ஆஜராவதை அரவிந்த் கெஜ்ரிவால் தவிர்த்துவிட்டார். 
 
இந்நிலையில் தற்போது 4வது முறையாக அமலாக்கத்துறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. வரும் ஜனவரி 18ஆம் தேதி விசாரணைக்கு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் நேரில் ஆஜராக வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments