Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நினைவு சின்னத்தை கூட பாதுகாக்க முடியாதா? யோகியை டார்கெட் செய்த கெஜ்ரிவால்!

Webdunia
வியாழன், 26 ஜூலை 2018 (19:32 IST)
தாஜ்மஹால் அமைந்துள்ள பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் உருவாகி வருவதால் வெள்ளை பளிங்கு கல்லால் கட்டப்பட்ட தாஜ்மஹால், தற்போது செம்பழுப்பு நிறத்திற்கு மாறி விட்டது.
 
சமீபத்தில் தாஜ்மஹாலை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கு தாஜ்மஹாலை உரிய முறையில் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் அதனை மூடி விடலாம் அல்லது இடித்து தள்ளி விடலாம் என காட்டமாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பதிலளித்தனர். 
 
தாஜ் மஹாலை மத்திய அரசின் புராதனத் திட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளலாம் என்று உத்தரப் பிரதேச அரசு உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தது. 
 
இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பின்வரும்ம்று ட்விட் செய்துள்ளார். முதல்வரைக் கூட ஒரு நிறுவனம் தத்தெடுக்கட்டும்? ஒரு பாரம்பரிய நினைவு சின்னத்தை பாஜகவால் பராமரிக்க முடியாவிட்டால் பாஜக அரசு பதவி விலகட்டும் என பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் பலத்த காற்று வீசும்.. மீனவர்களுக்கு எச்சரிக்கை..!

திருநெல்வேலியில் சாதிய தீண்டாமை படுகொலை.. பா ரஞ்சித் ஆவேசத்திற்கு நெட்டிசன்கள் பதிலடி

நேற்று பங்குச்சந்தை விடுமுறை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி நிலவரம் என்ன?

நேற்று உச்சம் சென்ற தங்கம் விலை இன்று சரிவு.. மீண்டும் 55000க்குள் ஒரு சவரன்..!

ஆர்.எஸ்.எஸ். அழைத்தால் சென்றுவிடுவேன்: ஓய்வு பெறும் நாளில் பேசிய உயர் நீதிமன்ற நீதிபதி!

அடுத்த கட்டுரையில்
Show comments