Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக்கை வெட்டி கோவில் உண்டியலில் போட்ட வாலிபர்: வேண்டுதல் என்ன தெரியுமா?

Webdunia
புதன், 5 டிசம்பர் 2018 (22:08 IST)
தெலுங்கானா மாகாணத்தில் ஒரு வாலிபர் தனது நாக்கை திடீரென வெட்டி கோவில் உண்டியலில் காணிக்கையாக போட்டார். இதனை அருகில் இருந்து பார்த்த பக்தர்கள் சிலர் அதிர்ச்சியில் உறைந்தும் சிலர் அலறி அடித்தும் ஓடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் 7ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்துவிட்ட நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் அவர்களின் தீவிர தொண்டர் ஒருவர் சந்திரசேகரராவ் மீண்டும் முதல்வராக வேண்டும் என்பதற்காக கோவில் உண்டியலில் நாக்கை வெட்டி போட்டுள்ளார்.

இந்த நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அந்த வாலிபருக்கு மீண்டும் நாக்கை ஒட்ட வைக்க முடியுமா? என்று மருத்துவர்கள் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. ஒரு அரசியல் தலைவருக்காக நாக்கை வெட்டிய தொண்டரின் தீவிர விசுவாசம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments