Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எந்த சூழ்நிலையிலும், லட்சுமணன் கோட்டை தாண்டக் கூடாது - பிரதமர் மோடி அறிவுரை

Webdunia
செவ்வாய், 16 டிசம்பர் 2014 (16:07 IST)
பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்த சூழ்நிலையிலும், லட்சுமணன் கோட்டை தாண்டக் கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
 
கடந்த சில காலங்களாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சித் தலைவர்களும் சர்ச்சைக்குறிய கருத்துக்களைத் தெரிவித்து கண்டங்களை மூட்டை மூட்டையாக அள்ளிக் கட்டிக் கொள்கின்றனர். இதனால் மேலிடத்தில் இது சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
இதனால் பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை சகாக்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அறிவுரை வழங்கும் வகையில் எச்சரித்துப் பேசியுள்ளார்.
 
இது தொடர்பாக இன்று நடைபெற்ற பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, “பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசுக்கும், கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான சர்ச்சை பேச்சுக்களைப் பேசக்கூடாது.
 
எந்த சூழ்நிலையிலும், லட்சுமணன் கோட்டை தாண்டக் கூடாது. இது போன்ற தேவையற்ற பேச்சுக்களால் அரசின் கவனம் திசை மாறுகிறது என்பதால், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசே தொடங்கிய ஓட்டுனர் பயிற்சி பள்ளி.. கார், பைக் ஓட்டும் பயிற்சிக்கு எவ்வளவு கட்டணம்?

அவதூறு வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும்.! ராகுலுக்கு பறந்த உத்தரவு..!!

இன்று இரவு 10 மாவட்டங்களில் கொட்டப்போகுது மழை! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அப்பர் பெர்த் கழன்று விழுந்ததால் ரயில் பயணி பரிதாப பலி.. ரயில் பயணத்தில் பாதுகாப்பு இல்லையா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எத்தனை பேர் போட்டி: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

Show comments