Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊழலுக்கு எதிராகப் போராடியவர் அநியாயமாகச் சுட்டுக்கொலை!

Webdunia
சனி, 19 ஏப்ரல் 2014 (10:11 IST)
உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஊழலை எதிர்த்து செயல்பட்டு வந்த 70 வயது நபரை மர்ம ஆசாமிகள் அநியாயமாக சுட்டுக் கொலை செய்தது பெரும் பரபரப்பாகியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலம் பாங்கன்டா கிராமத்தை சேர்ந்தவர் மங்கட் தியாகி. 70 வயதான இவர் பல்வேறு அரசு துறைகளில் நடைபெறும் ஊழல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளிஉலகுக்கு கொண்டு வந்தவர். 
 
சுமார் 14 ஆயிரம் தகவல் அறியும் விண்ணப்பங்களை அனுப்பியிருக்கிறார். கடந்த 14-ந்தேதி அவர் தனது வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, ஒரு காரில் அங்கு வந்த 3 பேர் மங்கட்டை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றனர். இதில் மங்கட் பரிதாபமாக உயிர் இழந்தார். 
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், இந்த வழக்கு விசாரணையை சிறப்பு அதிரடிப்படைக்கு மாற்றினர். 
 
அதோடு மங்கட் குடும்பத்தினருக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர். போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, மங்கட் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் விண்ணப்பித்துள்ள ஊழல் அதிகாரிகளின் பட்டியலை ஆராய்ந்து வருகிறோம். இதில் சில முக்கியமான துப்பு கிடைத்துள்ளது. எனவே விரைவில் குற்றவாளிகளை கைது செய்வோம் என்றார்.

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

மாபெரும் கிடா முட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட ஜோடி கிடாக்கள் பங்கேற்று, நேருக்கு நேர் மோதிக் கொண்டு வெற்றி.

வனத்துறை வெளியிட்டுள்ள யானை வழித் தட பரிந்துரை அறிக்கையை திரும்ப பெற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர். கோரிக்கை.

Show comments