Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளை நரபலி கொடுக்க முயற்சி?? – கேரளாவில் மடத்தை சூறையாடிய மக்கள்!

Webdunia
வெள்ளி, 14 அக்டோபர் 2022 (10:19 IST)
கேரளாவில் பெண் சாமியார் ஒருவர் குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்றதாக மக்கள் மடத்தை சூறையாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் தம்பதியர் மந்திரவாதியுடன் சேர்ந்து இரண்டு பெண்களை நரபலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பத்தினம்திட்டா பகுதியில் ஒரு நரபலி முயற்சி நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாளபுழா பகுதியில் வசந்தி அம்மா மடம் என்ற மடத்தை பெண் சாமியார் ஷோபனா என்பவர் நடத்தி வந்துள்ளார். பல ஆண்டுகளாக அங்கு மடம் நடத்தி வரும் ஷோபனா மந்திர காரியங்களுக்கு சிறுவர், சிறுமிகளை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு இருந்துள்ளது.

ALSO READ: ஒரே நாளில் 2,678 பேர் பாதிப்பு; 10 பேர் பலி! – இந்தியாவில் கொரோனா நிலவரம்!

இதுகுறித்து ஏற்கனவே பொதுமக்கள் புகாரளித்தும் போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. தற்போது நரபலி செய்திகள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதால் பெண் சாமியார் ஷோபனாவை கைது செய்த போலீஸார், அவர் குழந்தைகளை நரபலி கொடுக்க முயன்றாரா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த மடத்தில் இருந்த சிறுவர், சிறுமியர் அரசு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். பெண் சாமியார் மீது ஆத்திரத்தில் இருந்த அப்பகுதி மக்கள் மடாலயத்தை சூறையாடியதால் பரபரப்பு எழுந்துள்ளது.

Edited By: Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

‘நான்கு தலைமுறை வாழ்ந்த மாஞ்சோலை எஸ்டேட்டை விட்டு எங்கே போவது?’ - தொழிலாளர்கள் சொல்வது என்ன?

நான் இறந்துவிட்டேன்.. என் தொகுதி காலியாகிவிட்டது: லால்குடி எம்.எல்.ஏ அதிர்ச்சி பதிவு..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு..! பின் வாங்கிய அதிமுக..! காரணம் என்ன.?

விஜய்யை அடுத்து அஜித்தும் அரசியல் கட்சி தொடங்குவார்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

சென்னை விமான நிலையத்திற்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்.. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments