Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் பயங்கர ரயில் விபத்து.. 12 பெட்டிகள் தடம் புரண்டதால் அதிர்ச்சி..!

Webdunia
ஞாயிறு, 25 ஜூன் 2023 (09:03 IST)
கடந்த சில வாரங்களுக்கு முன் ஒடிசாவில் பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டதில் மிகப்பெரிய உயிரிழப்பு ஏற்பட்ட அதிர்ச்சியை இன்னும் தாங்க முடியாமல் உள்ளது. 
 
இந்த நிலையில் மேற்குவங்க மாநிலத்தில் இரண்டு சரக்கு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்ட விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விபத்துக்குள்ளான இரண்டு ரயில்களும் சரக்கு ரயில்கள் என்பதால் உயிர் சேதம் இல்லை என்பது ஒரு ஆறுதலான விஷயமாகும்.
 
மேற்குவங்க மாநிலம் பங்குரா என்ற பகுதியில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டது. இதனை அடுத்து 2 ரயில்களிலும் சேர்ந்து மொத்தம் 12 போட்டிகள் தடம் புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
சரக்கு ரயிலின் ஓட்டுனர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த ரயில் விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெயில் தாக்கம் எதிரொலி: 1-5 வகுப்புகளுக்கு முன்கூட்டியே முழு ஆண்டு தேர்வு..!

மியான்மரில் மீண்டும் நிலநடுக்கம்..! சாலைகள் இரண்டாக பிளந்ததால் மக்கள் அதிர்ச்சி..!

தோண்ட தோண்ட பிணங்கள்.. மியான்மரில் தொடரும் சோகம்! பலி எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்வு!

நகராட்சிகளாக மாறிய 7 பேரூராட்சிகள்: தமிழக அரசு அரசாணை..!

ஏலச்சீட்டு நடத்தி மோசடி.. கணவருடன் கைதான முன்னாள் பாஜக பெண் நிர்வாகி..!

அடுத்த கட்டுரையில்
Show comments