Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து: சந்திரபாபு நாயுடு நம்பிக்கை

Webdunia
ஞாயிறு, 26 ஜூலை 2015 (02:30 IST)
ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து  கிடைக்கும் என்று ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 

 
ஆந்திராவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திராவுக்கு சிறப்பு  அந்தஸ்து வழங்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்தி வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், சிறப்பு அந்தஸ்தை பெறுவதற்கு, சந்திரபாபு நாயுடுவுக்கு போதிய அக்கறை செலுத்துவில்லை என்றார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ராஜமுந்திரி அரசுக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட சந்திரபாபு நாயுடு பேசியதாவது:-
 
ஆந்திராவுக்கு சிறப்பு  அந்தஸ்து பெற வேண்டும் என்ற சம்பவமே இப்போதுதான், எதிர்க்கட்சிகளின் நினைவுக்கு வந்துள்ளது போலும். இதற்காக நான் இதற்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், எதிர்க்கட்சி மக்களை தவறாக வழிநடத்துகிறது. இதை அனுமதிக்க முடியாது.
 
மேலும், தெலுங்கு பேசும்  மக்கள், இப்போது இரு மாநிலங்களை பெற்றுள்ளனர். மத்திய அரசின்  முழு ஆதரவோடு ஆந்திராவின் தலைநகர் அமைக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆந்திராவுக்கு விரைவில் சிறப்பு அந்தஸ்து கிடைத்துவிடும். அதற்கான அனைத்து முயற்சிகளிலும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது என்றார். 
 

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments