Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதியில் சிக்கிய வினோத ஜந்துக்கள்.. கேமராவில் பதிவான காட்சிகள்

Webdunia
செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (14:19 IST)
திருப்பதி வனப்பகுதியில் வினோதமான விலங்குகள் அலைவது தானியங்கி கேமராவில் பதிவாகியுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுபாட்டில் இருக்கும் சேஷாசலா வனப்பகுதியில் பல அபூர்வ விலங்குகள் இருப்பதாக தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அதனை பாதுகாக்கும் நோக்கத்தோடு வனப்பகுதியில் ஆங்காங்கே கேமராக்கள் பொருத்தப்பட்டன. அந்த கேமராக்களில் தற்போது வினோதமான, இது வரை அறியப்படாத விலங்குகள் பதிவாகியுள்ளன.

கேமராவில் புனுகு பூனை, 4 கொம்பு மான், சாம்பார் மான், சோம்பல் கரடி, உள்ளிட்ட அரிய வகை விலங்குகள் பதிவாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து சேஷாசலா வனப்பகுதியில், வன விலங்குகளின் உருவ படங்கள் அச்சிடப்பட்டு, பக்தர்கள் வனப்பகுதிக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் பல விழிப்புணர்வு பலகைகளையும் வைக்க உள்ளதாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமரை அவமானப்படுத்திய முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்: அண்ணாமலை

37 ஆண்டுகள் கழித்து இன்று கருப்பு திங்கள்? ரத்தக்களறி ஆகுமா பங்குச்சந்தை?

உதகையில் இ-பாஸ் கட்டுப்பாடு: கடும் போக்குவரத்து சிக்கலால் சுற்றுலா பயணிகள் அவதி..!

வக்பு திருத்த சட்டத்திற்கு ஆதரவு.. பாஜக எம்.எல்.ஏ வீட்டுக்கு தீ வைத்த மர்ம கும்பல்..!

இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழை: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments