Webdunia - Bharat's app for daily news and videos

Install App

87 வயதிலும் ஆட்டோ ஓட்டும் முதியவர்

Webdunia
வெள்ளி, 6 ஏப்ரல் 2018 (09:39 IST)
தனது 87 வயதிலும் அடுத்தவர்களை நம்பி வாழாமல் முதியவர் ஒருவர், வாழ்க்கை நடத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்றைய நவீன உலகத்தில், பலர் அடுத்தவரின் பணத்தை திருடியும், நகையை திருடியும், வங்கியில் பணத்தை வாங்கிக் கொண்டு திரும்ப செலுத்தாமலும் பிழைப்பை நடத்தி வரும் வேளையில் முதியவர் ஒருவரின் செயல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு, பாடம் கற்பிக்கும் முறையில் உள்ளது.
 
டெல்லியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ்(87). இவரது 87 வயதிலும் அடுத்தவர்களை நம்பி வாழாமல் உழைத்து சம்பாதித்து பிழைப்பு நடத்துகிறார். விபத்தை ஏற்படுத்தாத வகையிலும், மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூட மக்களிடம் கேட்காததாலும், இவரது ஆட்டோவில் பயணிக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
 
1955-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை வாடகை டாக்சி ஓட்டி வந்த இவர். தற்பொழுது ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டும் என நினைக்கும் இவரது லட்சியம், பலருக்கு வாழ்க்கையில் முன்னேற உத்வேகத்தை அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments