Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சையெடுத்து கோயிலுக்கு 8 லட்சம் நன்கொடை வழங்கிய முதியவர்..

Arun Prasath
செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (17:28 IST)
ஆந்திராவில் முதியவர் ஒருவர் சுமார் 8 லட்சம் வரை பிச்சையெடுத்து சாய் பாபா கோயிலுக்கு நன்கொடை வழங்கிய சம்பவம் நடந்துள்ளது.

ஆந்திரா விஜயவாடாவில் 73 வயது மதிக்கத்தக்க முதியவரான யதிரெட்டி என்பவர் 40 ஆண்டுகளாக ரிக்‌ஷா ஒட்டி வந்தார். பின்பு வயது முதிர்வு காரணமாக பிச்சையெடுத்து சிறுக சிறுக சேமித்து, 1 லட்சம் ரூபாய் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

அதன் பின்னர், தனக்கு கிடைக்கின்ற அனைத்தையும் தானம் தருவதாக பிரார்த்தனை செய்த அவர், சுமார் 8 லட்சம் வரை சேமித்து சாய்பாபா கோவில் மற்றும் கோசாலை அமைப்பதற்காக நன்கொடையாக வழங்கியுள்ளார்.
பிச்சையெடுத்தே 8 லட்சம் வரை சேமித்த யதி ரெட்டி பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

சர்ச்சை வீடியோவை நீக்கிய இர்பான்.. கைது செய்யப்பட வாய்ப்பா?

பிரிவினையை தூண்டும் மோடி.! பொதுவாழ்க்கையில் இருந்து விலக வேண்டும்..! மல்லிகார்ஜுன கார்கே.!!

தமிழகத்திற்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும்.! கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு..!!

அடுத்த கட்டுரையில்
Show comments