Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த நேரத்திலும் அற்பமாக நடந்துக்காதீங்க! – காங்கிரஸ் மீது சீறிய அமித்ஷா!

Webdunia
வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (08:19 IST)
ஊரடங்கு உத்தரவு குறித்து காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பேசப்பட்டது குறித்து அமித்ஷா பதிலடி கொடுக்கும் வகையில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி ”மத்திய அரசின் திட்டமிடப்படாத 21 நாட்கள் ஊரடங்கால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கால் கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நிவாரண தொகையை அரசு அதிகப்படுத்த வேண்டும்” என பேசியுள்ளார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ”பிரதமர் நரேந்திர மோடி கொரோனாவுக்கு எதிராக எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உள்நாட்டிலும், பிற நாடுகளிலும் பலர் பாராட்டியுள்ளனர். 130 கோடி மக்களும் பிரதமருக்கு ஆதரவாக ஊரடங்கை பின்பற்றி வருகின்றனர். ஆனால் இந்த சூழலிலும் காங்கிரஸ் அற்பமான அரசியலை செய்து வருகிறது. மக்களை தவறாக வழிநடத்தும் போக்கை காங்கிரஸ் நிறுத்திக் கொள்ள வேண்டும்” என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஈரான் அதிபர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து.. மீட்புப்படையினர் விரைவு..!

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments