Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாட்டின் ஒரே மொழி ஹிந்தி மொழி தான்: அமித்ஷா

Webdunia
சனி, 14 செப்டம்பர் 2019 (10:57 IST)
ஹிந்தி தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் ஒரே ஒரு ஹிந்தி மொழியாகத் தான் இருக்கவேண்டும் என அமித்ஷா கூறியுள்ளார்.

இன்று நாடு முழுவதும் ஹிந்தி தினம் கொண்டாடப்படும் நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது டிவிட்டர் பக்கத்தில், ”இந்தியா வெவ்வேறு மொழி கொண்ட நாடாக இருந்தாலும், ஒட்டு மொத்த நாட்டுக்கும் ஒரே மொழி இருப்பது தான் இந்தியாவுக்கான அடையாளமாக இருக்கும். ஆதலால் மக்கள் தங்கள் தாய் மொழிகளுடன் ஹிந்தியையும் சேர்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் இந்தியாவை ஒருங்கிணைக்க வேண்டுமென்றால், அது ஹிந்தி மொழியால் மட்டுமே தான் முடியும் எனவும் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். பாஜக அரசு, “ஒரே நாடு, ஒரே மொழி” என்ற கோட்பாட்டின் அடிப்படையில், ஹிந்தியை தென் மாநிலங்களுக்கும் கொண்டு செல்ல முயற்சி செய்து வருகிறது என குற்றம் சாட்டப்படும் நிலையில் தற்போது அமித் ஷா, நாட்டின் ஒரே மொழி ஹிந்தி மொழி தான் என கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தமிழகத்தின் திராவிட அமைப்பின் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமெரிக்காவுக்கு எதிராக ஒன்று சேரும் நாடுகள்.. சவுதி அரேபியாவும் கண்டனம்..!

விஜய்க்கு பயந்து ஒரு தொகுதிக்கு ரூ.100 கோடி திமுக செலவு செய்யும்: பத்திரிகையாளர் மணி

அமெரிக்க தாக்குதல் எதிரொலி: அவசர அவசரமாக ரஷ்யா சென்ற ஈரான் அமைச்சர்..!

2 மணி நேரத்தில் 56 பேரை கடித்து வெறிநாய்: கேரளாவில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

பணத்திற்காக பெற்ற தாயை கொலை செய்த மகன்.. சகோதரி கண்டுபிடித்து புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments