Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காங்கிரஸ் கட்சியை மதிக்காமல் வேட்பாளரை அறிவித்த அகிலேஷ்! ராகுல் காந்தி அதிர்ச்சி..!

Siva
புதன், 31 ஜனவரி 2024 (07:58 IST)
காங்கிரஸ் கட்சியை மதிக்காமல் உத்தர பிரதேச மாநிலத்தில் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் திடீரென 16 பேர்கள் கொண்ட முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டணியை உருவாக்க காரணமாக இருந்தவரான நிதீஷ்குமாரே அதிலிருந்து விலகிவிட்டார்.

இந்த நிலையில் உத்தர பிரதேச மாநிலத்தில் 11 தொகுதிகள் மட்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவதாக கூறியிருந்த அகிலேஷ், காங்கிரஸ் அதை ஏற்றுக் கொண்டதா இல்லையா என்பதை கூட கண்டுகொள்ளாமல் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளார்.

ஒதுக்கப்பட்ட 11 தொகுதி எது என்பதை கூட முடிவு செய்யாத நிலையில் திடீரென அகிலேஷ் யாதவ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  காங்கிரஸ் கட்சியுடன் கலந்து ஆலோசிக்காமல் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை முடிக்காமல் தன்னிச்சையாக அகிலேஷ் யாதவ் வேட்பாளர்களை அறிவித்துள்ளது ராகுல் காந்தி அதிர்ச்சி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

சிபில் ஸ்கோர் இல்லாமல் லோன்.. கோடிக்கணக்கில் மோசடி செய்தவர் தலைமறைவு..!

கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மனைவி.. கள்ளக்காதல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments