Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகிலேஷூக்கு நான் அத்தை என்றால் தயாசங்கர் சிங்கை கைது செய்ய வேண்டும் - மாயாவதி

Webdunia
திங்கள், 25 ஜூலை 2016 (16:58 IST)
அகிலேஷ் யாதவ் அத்தை என்று அழைக்கிறார். அப்படியென்றால் அவர் முதலில் தயாசங்கர் சிங்கை கைது செய்யவேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியுள்ளார்.
 

 
இது குறித்து லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய மாயாவதி, “என்மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருப்பதன் மூலம் பாஜகவும், ஆளும் சமாஜ்வாடி அரசும் எனக்கு எதிராக சதி செய்வது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. உத்தரபிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருப்பதால் இதுபோன்ற சதிவேலையில் இரு கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.  
 
பாராளுமன்ற மேலவையில் பேசியதன் அடிப்படையில் என் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். ஆனால் ஒரு எம்.பி. பாராளுமன்றத்தில் பேசியதற்கு எதிராக வெளியே போலீசார் வழக்கு பதிவு செய்ய முடியாது. இது பாராளுமன்ற அவமதிப்பு ஆகும்.
 
என்னை முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அத்தை என்று அழைக்கிறார். அப்படியென்றால், அவர் முதலில் தயாசங்கர் சிங்கை கைது செய்யவேண்டும். பகுஜன் சமாஜ் தலைவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் வாபஸ் பெறவேண்டும்” என்று கூறியுள்ளார்.

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments