Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏ விவாதம்: அமித்ஷா சவாலை ஏற்று கொண்ட முன்னாள் முதல்வர்கள்!

Webdunia
வியாழன், 23 ஜனவரி 2020 (08:26 IST)
மத்திய அரசு சமீபத்தில் அறிமுகம் செய்த குடியுரிமை திருத்த மசோதாவிற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் இந்த சட்டத்தை வாபஸ் பெற முடியாது என்றும் தைரியமிருந்தால் தன்னுடன் பொது மேடையில் இந்த சட்டம் குறித்து விவாதம் செய்ய தயாரா? என்றும் அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
 
இந்த நிலையில் குடியிருப்பு சட்டம் குறித்த விவாதத்துக்கு நாங்கள் தயார் என உத்தர் பிரதேச மாநில முன்னாள் முதல்வர்களான அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் தெரிவித்துள்ளனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
குடியுரிமை சீர்திருத்த சட்டம் குறித்த விவாதத்திற்கு நாங்கள் தயார் என்றும் இந்த விவாதம் எங்கு நடத்தலாம் என்பதை அமித்ஷா அவர்களே இடத்தை தேர்வு செய்யலாம் என்றும் ஆனால் இந்த விவாதம் அனைத்து சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும் அமித்ஷா விரும்பும் தொகுப்பாளர்கள் இந்த விவாதத்தை நடத்தலாம் என்றும் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி ஆகியோர் தெரிவித்துள்ளனர். முன்னாள் முதல்வர்களின் இந்த கோரிக்கையை ஏற்று அமித்ஷா விவாதத்திற்கு சம்மதிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments