டெல்லியில் அபாய நிலையை தொட்ட காற்றுமாசு! – பள்ளிகளுக்கு விடுமுறை!

Webdunia
ஞாயிறு, 5 நவம்பர் 2023 (10:43 IST)
டெல்லியில் காற்றுமாசு அபாய அளவை தொட்டுள்ள நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



டெல்லியில் ஆண்டுதோறும் நவம்பர் முதல் ஜனவரி வரை குளிர்காலங்களில் காற்றுமாசுபாடு மிகவும் மோசமாக இருந்து வருகிறது. இந்த ஆண்டும் காற்று மாசுபாடு அபாய அளவை தொட்டுள்ள நிலையில் டெல்லியில் கனரக வாகனங்கள் உள்ளிட்டவற்றை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் நாளுக்கு நாள் காற்றின் தரம் மோசமாகி கொண்டே வருவதால் மக்கள் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பள்ளிகளுக்கு இன்று முதல் நவம்பர் 10ம் தேதி வரை தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய சூழல் தவிர்த்து வெளியே செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கவும் டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது.. அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை..!

SIR கணக்கெடுப்பு படிவங்களை அளிக்க இன்று கடைசி நாள்! 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கமா?

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

அடுத்த கட்டுரையில்
Show comments