Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 மாதங்களுக்கு பின் மீண்டும் திறக்கப்படும் தாஜ்மஹால்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Webdunia
புதன், 16 ஜூன் 2021 (13:26 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த இரண்டாவது அலையில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முக்கிய சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தற்போது 4 லட்சமாக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரமாக குறைந்துள்ளது. இதனை அடுத்து பல்வேறு தளர்வுகளை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகின்றன 
 
அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களாக மூடப்பட்டிருந்த தாஜ்மஹால் தற்போது திறக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் தாஜ்மஹால் திறக்கப்பட்டதை ஒரே நேரத்தில் 650 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் மூலமாகவே டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments