Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்டுபிடிக்க 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்கள்: புதிய யுக்தி

Webdunia
வெள்ளி, 6 பிப்ரவரி 2015 (10:17 IST)
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை கண்டுபிடிக்க 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்களை ஆம் ஆத்மியினர் தனது ஆதரவாளர்களிடம் கொடுத்துளளனர். 
 
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் நாளை (பிப்ரவரி) நடைபெறுகிறது. பிரச்சாரம் ஓய்ந்துள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம், மது பாட்டில்களை கொடுப்பதாக பாஜக மீது ஆம் ஆத்மி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.
 
இந்நிலையில், இதை நிரூபிக்க ஆதாரங்களை திரட்டும் வகையில் ஆம் ஆத்மி தனது ஆதரவாளர்களுக்கு 5 ஆயிரம் ஸ்பை கேமிராக்களை கொடுத்திருப்பதாக அக்கட்சியின் முக்கிய தலைவர் அசுதோஷ் தெரிவித்துள்ளார்.
 
பாஜக வினர் யாராவது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் செயலில் ஈடுபட்டால் அதை ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் இந்த ஸ்பை கேமிராவில் படம் பிடித்து உடனடியாக தேர்தல் ஆணையத்துக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.
 
இந்த ஸ்பை கேமிராவில் பதிவு செய்யப்படும் காட்சிகள் உடனடியாக பெறப்படும் வகையில் பிரத்யேகமாக மையங்களை ஆங்காங்கே ஆம் ஆத்மியினர் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

விஜயின் த.வெ.க மாநாட்டில் பங்கேற்பீர்களா.? சீமான் சொன்ன பளீச் பதில்..!!

Show comments