Webdunia - Bharat's app for daily news and videos

Install App

போனில் சார்ஜர் ஏற்றியவாறு அழைப்பை எடுத்து பேசிய வாலிபர் பலி

Webdunia
சனி, 20 டிசம்பர் 2014 (16:00 IST)
ராஜஸ்தானில் போனில் சார்ஜர் ஏற்றியவாறு அழைப்பை எடுத்து பேசிய வாலிபர் பலியானார்.
 
ராஜஸ்தான் மாநிலத்தின் புண்டி மாவட்டத்தில் உள்ள கோர்மா கிராமத்தை சேர்ந்த ராஜுலால் குஜார்(24) என்பவர் நேற்று தனது செல்போனில் சார்ஜ் ஏற்றிக்கொண்டு இருந்துள்ளார். 
 
அப்போது, எதிர் முனையில் இருந்து அழைப்பு வந்ததால் செல்போனை சார்ஜரில் இருந்து எடுக்காமலேயே காதில் வைத்து பேசத்தொடங்கினார். அப்போது, சற்றும் எதிர்பாராத வகையில் ராஜுலால் குஜாரின் செல்போன் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. 
 
இதில், கை மற்றும் மார்பு பகுதியில் காயமடைந்த அவரை உறவினர்கள் மருத்துவன்மனைக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், மின் அதிர்ச்சி மற்றும் தீக்காயம் காரணமாக வரும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு கடுமையான மழை இருக்கு.. அந்தமானில் தொடங்கியது தென்மேற்கு பருவமழை!

ஞாபகம் இருக்கிறதா.! பால்கனியிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை.! தாய் தற்கொலை..!!

எதிர்க்கட்சித் தலைவர்களிடம் கொட்டிக்கிடக்கும் பணம்..! காங்கிரஸ் கூட்டணியை தெறிக்கவிட்ட பிரதமர் மோடி..!!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதா.? கேரள அரசுக்கு இபிஎஸ் கண்டனம்..!!

ராமரின் பக்தர்களுக்கும் துரோகிகளுக்கும் இடையிலான போர் தான் மக்களவை தேர்தல்: யோகி ஆதித்யநாத்

Show comments