Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிச்சை எடுத்து கணவரின் இறுதிச் சடங்கை செய்த மனைவி

Webdunia
செவ்வாய், 24 ஜூலை 2018 (12:27 IST)
ஆந்திராவில் பெண் ஒருவர் பிச்சை எடுத்து தனது கணவனின்  இறுதிச் சடங்கை நடத்திய சம்பவம் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த பாபுசாயுபு என்பவர் கட்டிட மேஸ்திரியாக இருந்து வந்தார். இவருக்கு உடம்பு சரியில்லாததால் கடந்த சில நாட்களாக மதனப்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது மனைவி தவுலத்பீவி கணவரை மருத்துவமனையில் அருகிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் பாபுசாயுபு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். கணவரை வீட்டிற்கு அழைத்துச் செல்லவும், அவருக்கு இறுதிச் சடங்குகள் செய்யவும்  தவுலத் பீவியிடம் பணம் இல்லாததால் அவர் கதறி அழுதார்.
 
இதனையடுத்து அவர் மருத்துவமனை வாசலில் அமர்ந்து கொண்டு, மருத்துவமனை ஊழியர்களிடமும் சிகிச்சைக்காக வந்த நோயாளிகள், அவர்களுடன் வந்தவர்களிடமும் பிச்சை எடுத்தார். இந்த காட்சி பார்ப்போரின் நெஞ்சை பதற வைக்கும் விதமாக இருந்தது.
 
இறுதியில் பிச்சை எடுத்த பணத்தை வைத்துக் கொண்டு, கணவனின் உடலை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு தனது சொந்த ஊருக்குக் கொண்டு சென்று இறுதிச்சடங்கை செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments