Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் விலை உயர்வு எதிரொலி: பொதுமக்கள் முன்னிலையில் பைக்கை எரித்த நபர்

Webdunia
செவ்வாய், 22 மே 2018 (15:58 IST)
கர்நாடக தேர்தலை முன்னிட்டு 15 நாட்களாக உயராத பெட்ரோல், டீசல், விலை, தேர்தல் முடிந்த அடுத்த நாள் முதல் பயங்கரமாக ஏறி வருகிறது. சுதந்திர இந்தியாவின் வரலாற்று சாதனையாக பெட்ரோல் விலை ரூ.80ஐ தொடும் அளவுக்கு உயர்ந்துள்ளது.
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தபோதிலும், அதிகப்படியான வரியினால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 
 
இந்த நிலையில் ஆந்திர பிரதேச மாநிலத்தில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த ஒருவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தனது சொந்த பைக்கை பொதுமக்கள் முன்னிலையில் அதே பெட்ரோலை ஊற்றி எரித்தார். இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments