Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியர்களுக்கு ஸ்பெஷல் விசா அறிவித்த துபாய் அரசு! 5ஆண்டுகள் செல்லும்..!

Mahendran
வெள்ளி, 23 பிப்ரவரி 2024 (18:01 IST)
இந்தியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் வரை செல்லும் ஸ்பெஷல் விசாவை துபாய் அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்தியாவிலிருந்து சுற்றுலா நிமித்தமாகவும், தொழில் நிமித்தமாகவும் துபாய் செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் துபாய் இந்த சிறப்பு விசாவை அறிமுகம் செய்துள்ளது.
 
 இதன்படி இந்தியர்கள் அடிக்கடி துபாய் சென்று வருவதற்கு வசதியாக ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும் வகையில் பிரத்யேகமான விசாவை துபாய் பொருளாதார மற்றும் சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.
 
துபாயின் பொருளாதாரம் மற்றும் சுற்றுலாவை மேலும் அதிகரிக்க இந்த புதிய விசா திட்டம் உதவும் என்றும் இந்த விசாவுக்கு விண்ணப்பித்த இரண்டு முதல் ஐந்து நாட்களில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்தியர்களுக்கு பிரத்யேகமாக இந்த விசா அறிவிப்பை வெளியிட்டதால் அதிக அளவில் இந்தியர்கள் துபாய்க்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு இருப்பதாகவும் இதனால் துபாய் சுற்றுலா துறைக்கு அதிக வருமானம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடிக்கடி துபாய் செல்லும் இந்தியர்களுக்கும் இந்த விசா வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேருந்தை தள்ளலாம்.. ரயிலை தள்ளிய ஊழியர்களை கேள்விப்பட்டதுண்டா? அதிர்ச்சி தகவல்..!

பிரதமர் மோடியின் 100 நாட்கள் ஆட்சியில் 38 ரயில் விபத்துகள்.. புள்ளி விவரங்கள் தரும் காங்கிரஸ்..!

ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை; ப சிதம்பரம்..!

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு AI-க்கு பயிற்சி: மெட்டா நிறுவனம் திட்டம்!

இதுவே கடைசி.. போராட்டம் நடத்தும் மருத்துவர்களுக்கு முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments