Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடப்பக்கட்டையால் தாயை தாக்கிய மகன்: பெங்களூருவில் பரபரப்பு

Webdunia
திங்கள், 10 டிசம்பர் 2018 (09:18 IST)
பெங்களூருவில் தன்னைப் பற்று தனது தாய் பக்கத்து வீட்டாரிடம் அவதூறாக பேசியதாக கூறி மகன் தனது தாயை தொடப்பக்கட்டையால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த 17 வயது வாலிபர் ஒருவன் தனது பெற்றோரின் பேச்சைக் கேட்காமல், சிறுவயதிலேயே, மது அருந்துதல், சிகிரெட் பிடித்தல் போன்ற தீய பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளான். இது மட்டுமில்லாமல் சில பெண்களுடனும் இந்த வாலிபருக்கு தொடர்பு இருந்துள்ளது. 
 
இதனை அந்த சிறுவனின் தாய் பக்கத்து வீட்டாரிடம் கூறி புலம்பியுள்ளார். அவர்களும் அந்த வாலிபனை அழைத்து அறிவுரை கூறியுள்ளனர்.
 
இதனால் ஆத்திரமடைந்த அந்த வாலிபர், நேராக வீட்டிற்கு சென்று தன் தாயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளான். கொடூரத்தில் உச்சமாய் பெற்ற தாய் என்றும் பாராமல் அவரை தொடப்பக்கட்டையால் அடித்து துன்புறுத்தியுள்ளான்.
 
இதனை அந்த வாலிபரின் தங்கை வீடியோவாக படம்பிடித்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவானது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தவே, போலீஸார் அந்த கொடூர வாலிபரை கைது செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

வைகை அணையில் வினாடிக்கு 1.500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு!

நான் கருப்பு பணம் வைக்கவில்லை வெயிலில் நின்று நான் கருத்த பணத்தில் தான் மக்களுக்கு உதவுகிறேன்-நடிகர் பாலா!

முதல் 4 கட்ட தேர்தல்களில் 66.95% வாக்குப்பதிவு..! தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே இரவில் நான்கு கோவில்கள் உண்டியல் உடைப்பு- பல ஆயிரம் ரூபாய் பணம் கொள்ளை

காட்டு யானை ரேஷேன் கடை கட்டிடத்தை உடைத்து கதவுகளை நொறுக்கி அட்டகாசம்!

அடுத்த கட்டுரையில்
Show comments