Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதலமைச்சரே எப்போ ராஜினாமா செய்யப்போறீங்கன்னு கேட்ட போலீஸ் சஸ்பெண்ட்

Webdunia
புதன், 20 ஜூன் 2018 (07:28 IST)
போலீஸ் அதிகாரி ஒருவர் முதலமைச்சரை ராஜினாமா செய்ய சொன்னதற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவடைந்து பல குழப்பத்திற்கு பிறகு காங்கிரஸ் - மஜத கூட்டணி அமைத்து குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். குமாரசாமி தேர்தல் பிரச்சாரத்தின்போது தான் முதலமைச்சராக பதவியேற்ற 24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக கூறியிருந்தார். ஆனால் தற்பொழுதுவரை அவர் இதுகுறித்து எதுவும் பேசாததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில் உப்பள்ளி காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் அருண் டோலின் தனது முகநூல் பக்கத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்யாத குமாரசாமி எப்பொழுது பதவியை ராஜினாமா செய்யப்போகிறார் என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுபற்றி தகவலறிந்த காவல்துறை உயரதிகாரி, முதலமைச்சரை விமர்சித்து பேசியதற்காக அருண் டோலினை பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார். மேலும் இதுதொடர்பாக விளக்கம் கேட்டு டோலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments