Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேற்று கிரகவாசியின் பொருளைக் கண்டதாக இளைஞர் பிரதமருக்கு மின்னஞ்சல்...

Webdunia
வெள்ளி, 28 டிசம்பர் 2018 (13:11 IST)
வேற்று கிரக வாசிகளைப் பற்றி நிறைய ஹாலிவுட் படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க விமான ஓட்டிகளும், வெளிநாட்டவரும் ஏலியன்ஸ் மற்றும் வேற்று கிரக வாசிகளை  பார்த்ததாகக் கூறி வருகின்றனர்.
அதேபோல ஒரு சம்பவம் தற்போது இந்தியாவிலும் நடந்திருக்கிறது. மராட்டிய மாநிலம் புனேவில்  உள்ள கோத்ருட் என்ற இடத்தைச் சேர்ந்த ஒருவர் தன் வீட்டுக்கு அருகே வேற்றுக் கிரக வாசியின் பொருளைக் கண்டதாக பிரதமர்   அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி உள்ளார். அதே மின்னஞ்சலை பிரதமர் அலுவலகம் மராட்டிய அரசுக்கு அனுப்பி வைத்தது. இதனையைடுத்து போலீஸார் அங்கு விசாரணை மேற்கொண்டனர்.
 
மின்னஞ்சல் அனுப்பிய இளைஞரை போலீஸார் தேடிப் பிடித்து விசாரித்தனர்.அப்போது அந்த நபர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்தது.
 
சில நாட்களுக்கு முன் அவர் மின் விளக்கு கம்பங்களைப் பார்த்து இருக்கிறார். அதை வேற்று கிரகவாசிகளின் பொருள் என கருதி இருக்கிறார்.அதாவது , அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால்  மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மன பிரம்மையில் மின் விளக்கை வேற்று கிரகவாசிகளின் சிக்னல் என நினைத்து மின்னஞ்சல் செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments