Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”கொஞ்சம் பண கஷ்டம்.. ஆன்லைனில் காசு கேட்ட கவர்னர்?” – இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சி!

Webdunia
செவ்வாய், 31 ஜனவரி 2023 (08:54 IST)
இமாச்சல பிரதேசத்தின் கவர்னர் இன்ஸ்டாகிராமில் வந்து சிலரிடம் பண கஷ்டம் என சொல்லி காசுகேட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டின் பல பகுதிகளிலும் நாளுக்கு நாள் சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. பல வகைகளில் மக்களை ஏமாற்றி மோசடி கும்பல் பணம் பறித்து வருகிறது. அதில் முக்கியமான ஒன்று பிரபலங்கள் பெயரில் போலி ஐடி மூலமாக காசு கேட்பது.

பிரபலமான ஆட்கள் பெயரில் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்றவற்றில் போலி ஐடி உருவாக்கி அதில் மற்ற நபர்களின் இன்பாக்ஸ் சென்று பயணம் செய்த வழியில் பெட்ரோல் இல்லாமல் மாட்டிக் கொண்டதாக, மருத்துவ அவசரம் என பல காரணங்களை கூறி பணம் அனுப்ப சொல்லுவது தொடர்கதையாக உள்ளது.

சமீபத்தில் இமாச்சல பிரதேச கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கிய கும்பல் அதன் மூலமகா அவசர உதவி என மக்களிடம் பணம் கேட்டுள்ளது.

இதுகுறித்து தனது பெயரில் பணம் கேட்டால் யாரும் கொடுக்க வேண்டாம் என மக்களை கவர்னர் எச்சரித்துள்ளார். மேலும் அந்த போலி ஐடியை முடக்கவும் போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வரி ஏய்ப்பு வழக்கு: இத்தாலிக்கு ரூ.2953 கோடி கொடுக்க கூகுள் சம்மதம்..!

கோவை சிபிஎஸ்சி பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை.. 56 வயது ஓவிய ஆசிரியர் கைது..!

பொதுத்தேர்வில் முறைகேடுகளை தடுக்க புதிய நடைமுறை.. தமிழக தேர்வுகள் இயக்ககம் தகவல்..!

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள்.. கைகளில் விலங்கிட்டு காங்கிரஸ் போராட்டம்..!

திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலம் குறித்த அனைத்து வழக்குகள்: நீதிமன்றம் அதிரடி உத்தர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments