Webdunia - Bharat's app for daily news and videos

Install App

130 வருட முதலைக்கு இறுதிச்சடங்கு: நெகிழ வைத்த கிராம மக்கள்

Webdunia
சனி, 12 ஜனவரி 2019 (14:45 IST)
சத்தீஸ்கரில் 130 வருட முதலைக்கு கிராம மக்கள் இறுதிச்சடங்கு செய்தது பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாகவே முதலை என்றால் அது கொடூரமானது. அது மனிதர்களை கொல்லும் கொடிய மிருகம் என்று தான் கூறுவர். சத்தீஸ்கரில் உள்ள பவமோக்த்ரா கிராமத்தில் உள்ள குளத்தில் முதலை ஒன்று வசித்து வந்தது.
 
அந்த கிராமத்தில் உள்ள மக்கள் குளத்தில் குளிக்க சென்றாலும் அந்த முதலை அவர்களை தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்கும். இதனால் அந்த முதலை மீது ஈர்ப்பு கொண்ட மக்கள் அதன் மீது பேரன்பு வைத்து அதனை பாசமாக கவனித்து வந்தனர்.
 
இந்நிலையில் 130 வயதான அந்த முதலை உடல்நலக்குறைவால் காலமானது. இதனால் வருத்தமடைந்த ஊர் மக்கள், அதற்கு கண்ணீர் மல்க இறுதி அஞ்சலி செய்தனர். பின்னர் முதலையை அடக்கம் செய்தனர். கிராம மக்களின் இந்த செயல் பலரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments