Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் சிலைக்கு ரூ.11 கோடி மதிப்புள்ள கிரீடத்தை நன்கொடையாக அளித்த வியாபாரி!

Sinoj
செவ்வாய், 23 ஜனவரி 2024 (18:38 IST)
அயோத்தி ராமர் சிலைக்கு வைர வியாபாரி ஒருவர் ரூ.11 கோடி மதிப்புள்ள கிரீடத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தில் ராமர் கோவில் பிராணண பிரதிஷ்டை விழா  நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இவ்விழாவில், பிரதமர் மோடி  பால ராமர் சிலைக்கு பூஜை செய்தார். அதன்பின்னர்,  உ.பி., முதல்வர் யோகி ஆதித்ய நாத், ஆளு நர் ஆனதிபென் படேல், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் பூஜை செய்து வழிபட்டனர்.

இந்த நிகழ்ச்சியையொட்டி,  நாடு முழுவதும் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயிலுக்கு பலரும் நன்கொடை அளித்து வரும்  நிலையில், குஜராத்  மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி முகேஷ் படேல், அயோத்தி ராமர் சிலைக்கு ரூ.11 கோடி மதிப்புள்ள கிரீடத்தை நன்கொடையாக அளித்துள்ளார்.

இந்த கிரீடம் 6 கிலோ எடைகொண்டதாகும், இதில், வைரல், தங்கம்  மற்றும் விலை உயர்ந்த கற்களால் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், சமீபத்தில்  தியேட்டரில் ரிலீஸான ஹனு-மான் படத்திற்கு  தற்போது வரை விற்பனையான  53,28,211 டிக்கெட்டுகளில் இருந்தும் ரூ. 5 ஒதுக்கீடு செய்து, அதன் மூலம் கிடைத்த ரூ.2.66 கோடியை ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வழங்குவதாக  நேற்று படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடைமுறைக்கு வந்த புதிய குற்றவியல் சட்டம்..! இபிஎஸ் கண்டனம்.!

வட்டச் செயலாளராக இருக்ககூட தகுதியில்லாதவர் அண்ணாமலை..! செல்வப்பெருந்தகை விமர்சனம்..!!

மக்களவையை தெறிக்கவிட்ட ராகுல்.! அனல் பறக்கும் விவாதம்..! 2 முறை குறுக்கிட்ட பிரதமர் மோடி.!!

ஆக்கும் சக்தி கடவுள் என்றால் காக்கும் சக்தி மருத்துவர்கள் தான்: அன்புமணியின் மருத்துவர் தின வாழ்த்து..!

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு: ஆஸ்திரேலியா அதிர்ச்சி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments