Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாரஷ்டிர பாஜக துணைத்தலைவர் சாலைவிபத்தில் பலி

Webdunia
செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (09:05 IST)
மகாரஷ்டிர பாஜக துணைத்தலைவர் சாலைவிபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாரஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில் பாஜக துணைத்தலைவராக குருநாத் வாமன் லாஸ்னி இருந்து வந்தார்.
 
இந்நிலையில் பணி நிமித்தமாக வெளியூர் சென்றிருந்த குருநாத் வாமன் லாஸ்னி, காரில் சொந்த ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த ஒரு டிராவல்ஸ் வண்டி கட்டுப்பாட்டை இழந்து குருநாத் காரின் மீது வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில், குருநாத் சம்பவ இடத்திலே பலியானார்.
 
விபத்தை ஏற்படுத்திய டிராவல்ஸ் டிரைவர் தலைமறைவானார். பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குருநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் தலைமறைவாக உள்ள டிராவல்ஸ் டிரைவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெலுங்கை எங்க மேல திணிக்கிறாங்க.. தெலுங்கானா மாணவர்கள் போராட்டம்!

இன்றிரவு 12 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மத்திய அரசு அதிக நிதியை ஒதுக்கியும் சிலர் அழுது கொண்டே இருக்கிறார்கள்: பிரதமர் மோடி

பிரதமர் மோடியின் இலங்கை பயணம்.. சில நிமிடங்களில் 14 தமிழக மீனவர்கள் விடுதலை..!

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.. தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பா?

அடுத்த கட்டுரையில்
Show comments