Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாம்பை மென்று சாப்பிட்ட 3 வயது சிறுவன்… அதிர்ச்சி சம்பவம்

Webdunia
திங்கள், 5 ஜூன் 2023 (19:26 IST)
விளையாடும் போது பாம்பை சாப்பிட்ட சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பரூக்பாத் மாவட்டத்தில் உள்ள மத்னாபூரில் வசிப்பவர் தினேஷ்குமார். இவரது மகன் ஆயுஷ் ( 3 வயது). இவர் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருக்கும் போது, பாட்டியில் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதையடுத்து, பெற்றோர் பதறியடித்துக் கொண்டு வீட்டின் முன் வந்தனர். அப்போது, ஆயுஷ் தன் வாயில் எதையோ மென்று கொண்டிருந்தார். இதைப் பார்த்த பெற்றோர், அதை வாயில் இருந்து எடுத்தபோதுதான் அது பாம்பு என்று தெரிந்ததும் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே, இறந்த பாம்பை பையில் போட்டு, குழந்தையை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். 24 மணி நேரக் கண்காணிப்புக்குப் பிறகு குழந்தை அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகத் தெரிவித்தனர்.

தற்போது, குழந்தை  மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீட்டிற்குச் சென்றுள்ளதாகவும் நலமுடன் இருப்பதாகத் தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

50 டிகிரி செல்சியஸ் வெப்பம்.. வெப்ப அலை எதிரொலி: 144 தடை உத்தரவால் அமல்..!

கரையை கடக்க தொடங்கியது ரெமல்’ புயல்.. கொல்கத்தாவில் கனமாழி

நீதிபதி சுவாமிநாதன் மீது புகார்..! நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றத்திற்கு கொளத்தூர் மணி கடிதம்..!

இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு..! உறவினர்கள் சாலை மறியல் - பதற்றம்..!!

அனைத்து மக்களுக்கும் 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குக.! இபிஎஸ் வலியுறுத்தல்..!!

அடுத்த கட்டுரையில்
Show comments