Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தந்தையின் துப்பாக்கிக்கு இரையாகிய 13 வயது சிறுவன்

Webdunia
ஞாயிறு, 8 ஜூலை 2018 (13:25 IST)
பஞ்சாப்பில் தந்தையின் துப்பாக்கியை எடுத்து விளையாடிய சிறுவன் அதிலிருந்த குண்டு பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
பஞ்சாப்பை சேர்ந்தவர் ரவிந்தர் சிங் பாபி. இவர் அமைச்சர் ஒருவரின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்து வருகிறார்.
 
இந்நிலையில் ரவிந்தர், தனது 13 வயது மகன் அஹ்ரானுடன் கோடை விடுமுறைக்காக உத்தரகாண்ட் சென்றுள்ளார். காரில் சென்ற ரவிந்தர், தன் இடுப்பில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து காரில் உள்ள பெட்டியில் வைத்துள்ளார்.
 
இதனை பார்த்த அஹ்ரான், தந்தை வெளியே சென்ற நேரத்தில் பெட்டியில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாட்டாக சுடவே குண்டு சிறுவன் மீது பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்தான்.
 
இதனால் அதிர்ந்துபோன ரவிந்தர் மகனின் உடலைக் கண்டு கதறினார். இதுகுறித்து போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீஸார் விரைந்துவந்து சிறுவனின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த துக்கத்தில் உள்ள ரவிந்தரை, சிறுவன் கண்ணில் படும் படி துப்பாக்கியை வைத்தது தவறு என பலர் திட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

நாய்கள் மட்டுமல்ல, மாடுகள் வளர்த்தாலும் லைசென்ஸ் வேண்டுமா? சென்னை மாநகராட்சி அதிரடி

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு.. புயலாக மாறுமா? வானிலை மையம் தகவல்..!

முதல்முறையாக வாக்களித்த நடிகர் அக்சய்குமார்.. யாருக்கு வாக்கு என பேட்டி..!

விவசாயி வங்கிக் கணக்குக்கு திடீரென வந்த ரூ.9900 கோடி! என்ன நடந்தது?

ஸ்வாதி மாலிவால் பாஜக-வில் இணைகிறாரா? ஜேபி நட்டாவிடம் மறைமுக பேச்சுவார்த்தையா?

அடுத்த கட்டுரையில்
Show comments